சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ’மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு’ விழா l நடைபெற்றது. இந்த விழாவில் திராவிடா் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் முன்னிலை வகித்தார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “இந்தப் பாராட்டு விழாவால் மக்களுக்காக இன்னும் கடுமையாக போராட வேண்டும் என்று எண்ணம் எழுகிறது. விழா அழைப்பிதழில் என்னை ’மாநில சுயாட்சி நாயகர்’ என்று குறிப்பிட்டுள்ளனர். என்னை பொறுத்தவரை திமுகவிற்கு வாக்களித்தால் சமூக நீதி ஆட்சியாக, மாநில சுயாட்சிக்காக போராடுவார் என நம்பி வாக்களித்த மக்கள் தான் உண்மையான மாநில சுயாட்சி நாயகர்கள்.

என்னை பொறுத்தவரை வெற்றி என்பது டீம் வொர்க். இதனால் ல்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கை நடத்திய வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தினோம். பொதுவாக பாராட்டு விழா என்று யாராவது கேட்டால் நான் நேரம் அளிப்பதில்லை. ஆனால், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி. எனவே தான் இன்று நடைபெறும் பாராட்டு விழாவிற்கு நான் ஒப்புதல் அளித்தேன்
முதல்வராகி மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டினால், மத்திய அரசின் ஏஜெண்டாக உள்ள ஆப்ட்ரால் ஆளுநர் திட்டங்களை தடுக்க முடியும் என்றால் மக்கள் போடும் ஓட்டுக்கு என்ன மரியாதை? ஆளுநர் பதவி என்பது எந்தப் பயனும் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் போன்றது.

கல்வி நிலையங்கள் இருப்பது மாநில அரசின் இடத்தில். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பது மாநில அரசு. மாணவர்களுக்கு வசதிகள் செய்து தருவது மாநில அரசு. ஆனால், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் ஆளுநருக்கு என்றால் எந்தவிதத்தில் நியாயம்?
அதனால்தான் உச்சநீதிமன்றம் சென்றோம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சட்டத்தின் வழி நின்று தீர்ப்பு மூலம் பூனைக்கு மணி கட்டியுள்ளனர். சட்டமன்றம் அளிக்கக் கூடிய மசோதா மீது ஒரு மசோதா ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளனர். ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்தது இந்த வழக்கின் மிகப்பெரிய வெற்றி. இப்படி ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளோம். பிரதமரின் உரிமையை ஜனாதிபதி எடுத்துக்கொண்டால் சும்மா இருப்பாரா?
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.எ.ரவி கூட்டும் மாநாடு.. துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா.? முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?

நாங்கள் ஆளுநருடன் அதிகாரப் போட்டி நடத்தவில்லை; ஆளுநருக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட பகை இல்லை. சமீபத்தில் கூட ஆளுநர் மாளிகைக்கு சென்றேன். அரசியலில் கொள்கை மாறுபாடு இருந்தாலும், மனிதர்களுக்குள் நட்புறவு, பண்பாடு காக்கப்பட வேண்டும். நமது மாநில உரிமையை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதுதான் என்னுடைய பாலிசி. என்னைக் கேட்டால் இதே ஆளுநர் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்று ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிங்க: ஆளுநரின் அடாவடி.. துணைவேந்தர் மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்.. முதல்வருக்கு திருமா அழுத்தம்!!