ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திமுக வேட்பாளர் கே கே கதிரவனை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: பரமக்குடி வேட்பாளரை 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். மத நல்லிணகத்திற்கு எடுத்துக்காட்டு ராமநாதபுரம் மாவட்டம். கடந்த தேர்தலில் நான்கு தொகுதிகளையும் வெற்றி பெற வைத்தீர்கள், அதேபோல் இந்த தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
தியாகி இமானுவேல் சேகருக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு விழா அறிவித்துள்ளது. பரமக்குடி அரசு மருத்துவமனை 50 கோடி மதிப்பில் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் 16 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 31 கோடி மதிப்பீட்டில் பார்த்திபனூர் - கமுதி புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 16 கோடி மதிப்பீட்டில் புதிய வார சந்தை வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படுகிறது. பரமக்குடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுளள்து திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.
இதையும் படிங்க: திமுகவின் B டீம் TVK... வில்லிவாக்கத்து வில்லன் ஆதவ்..! எழும்பூர் அதிமுக வேட்பாளர் விமர்சனம்..!!
கட்டணமில்லா பேருந்து திட்டம் வாக்குறுதி கொடுத்தோம், அதை செய்தோம், 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.லேப்டாப் திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது என அதிமுக பொய் கூறுகிறது. 10 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் கொடுத்துள்ளோம். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்த அதிமுக, பாஜக முயற்சி செய்தது. சில மாநிலங்களில் நீதிமன்றம் மூலம் நிறுத்தி உள்ளனர். மூன்று மாத உரிமைத் தொகை மற்றும் கோடைகால சிறப்பு தொகை என 5 ஆயிரம் வரவைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி 31 லட்சம் மகளிர்க்கு மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
மினிமம் பேலன்ஸ் இல்லை என மோடி மகளிர் உரிமை தொகையை புடுங்கி விடுவார் என அச்சத்தில் நீங்கள் எடுத்து விட்டீர்கள். திமுக ஆட்சி அமைத்தவுடன் ரூபாய் 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும், தேவையான மின்சாதன பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
வளர்கின்ற மாநிலங்களில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டிற்கு பாஜக ஒன்றிய அரசு நிதி உதவி கொடுக்கவில்லை. தேர்தல் வந்தவுடன் மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், ஆனால் நிதி வரவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை.இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.டெல்லியில் அணியில் மோடி, எடப்பாடி பழனிச்சாமி உள்ளனர். இந்த தேர்தலில் 10 தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி என வீட்டுக்கு அனுப்புகிறோம். இதே பரமக்குடியில் என்னை உதயநிதி திட்டுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
என் அனுபவம் தான் உதயநிதி ஸ்டாலினின் வயது என எடப்பாடி பழனிச்சாமி பரமக்குடியில் பேசியிருகிறார். உருட்டல் மிரட்டலுக்கு பயப்படாத என்னுடைய அனுபவம் . சங்கி கூட்டத்திற்கு பயப்படாதது அனுபவம். சுயமரியாதையுடன் இருப்பது என்னுடைய அனுபவம். மக்களுடன் மக்களாக இருப்பது எனது எனது அனுபவம். உங்கள் அனுபவம் என்ன?.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஜெயலலிதா காலில் கிடந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா கால். கொஞ்ச நாள் டிடிவி தினகரன் கால் தற்போது மோடி, அமித்ஷா கால். பல கால்களை பார்த்து ஓடிய அனுபவம் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி போல் முரட்டு அடிமையை யாரும் பார்த்ததில்லை. மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி என பேசினார்.
இதையும் படிங்க: முதல்வரை எதிர்த்து..! தவெக வி.எஸ்.பாபு வேட்பு மனுத் தாக்கல்..!!