பாஜக என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற நினைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரைமுறை செய்து நிர்ணயித்த முதல் தீர்மானம் 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக அருதி தனி பெரும்பான்மையோடு கூட்டணி அரசுக்கு அவசியமே இல்லாத அளவுக்கு வெற்றி பெறும். அந்தக் கூட்டணியில் தோள் கொடுத்து உதவி கொண்டிருக்கும் மதிமுக திமுகவின் வெற்றிக்காக அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி பாடுபடுவோம். 2026 தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக மதிமுக பாடுபட்டு உழைப்போம்.

வரும் செப்டம்பர் 15 தேதி அண்ணாவின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களுக்கும் ஓட்டுரிமை கொடுக்கக் கூடாது என்பதை இந்துத்துவா முடிவு செய்துள்ளது. நூற்றாண்டுகளாக இந்தியா என அழைக்கப்பட்ட நிலப்பரப்பை பாரத் என அழைப்பதும், தலைநகர் டெல்லியை மாற்றுவதும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப்படாது என சொல்வதும், மதச்சார்பின்மை கொள்கையை முழுமையாக நிராகரிப்பதும் என இந்துத்துவா சக்திகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாஜக என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கின்றன.
இதையும் படிங்க: மதிமுகவுக்கு இரட்டை இலக்க தொகுதி... நான் சொன்னேனா? வைகோ ஆவேசம்..!

1930 களில் இந்தி எதிர்ப்பு தமிழகத்திலிருந்து எழுந்தது. இந்தியை எதிர்த்து அண்ணாவும், பெரியாரும் மாநாடு நடத்தினார்கள். ஒரு மொழிக்காக தீக்குளித்த வரலாறு தமிழ்நாடு இன்றி உலகில் வேறு எங்கும் ஏற்பட்டது இல்லை. இதற்கு முழுக்க முழுக்க காரணம் திராவிட இயக்கம் தான். தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை பற்றி ஒன்றிய அரசு கவலைப்படவில்லை. நிதி இல்லை என்றாலும் மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை திமுக நிறைவேற்றி வருகிறது. தாய்மார்கள் பேருந்துகளில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்யலாம், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் திமுகவுக்கு பெண்கள் மத்தியில் வாக்கு வங்கியில் அதிகரிக்க செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பெண்களின் வாக்குகளின் 90 சதவீத வாக்குகள் திமுக கூட்டணிக்கு தான் சேரும். நிர்வாக குழு கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கம் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து நான் பேசியதாக செய்திகள் வந்துள்ளது.அந்த வார்த்தையே கூட்டத்தில் வரவில்லை என்று தெரிவித்தார்., தெருவில் செல்பவன் யாரோ உளறி இருப்பான். இரட்டை இலக்கம் என்ற பெயரே நான் சொல்லவில்லை.கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் கோரிக்கையும் வைக்கவில்லை, அதைப் பற்றி பேசவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாமகவின் பிளவு... ஒரே வார்த்தையில் ஷாக் கொடுத்து ஆஃப் செய்த வைகோ!