இந்தியாவின் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் முதன்முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் பணியில் பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் பணி தாமதமாகத் தொடங்கிய நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மக்களை பங்கேற்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக மற்ற மாநிலங்களைவிட சற்று தாமதமாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கின. சுய விவரக் கணக்கெடுப்பு ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஜூலை 31 வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை மேற்கொள்ளப்படும். இந்தத் தகவலை ஆளுநர் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் அர்லேகர், “மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதை ஒரு தேசியப் பொறுப்பாகக் கருதி, துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தானே சுய விவரப் பதிவு செய்யும் செயல்முறையை முன்னுதாரணமாகக் காட்டியும், பொதுமக்களை ஊக்குவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து அதிரடி... நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து..! விஜய் அரசின் அடுத்த மூவ்..!!
இந்தக் கணக்கெடுப்பு நாட்டின் எதிர்காலத் திட்டமிடல், கொள்கை வகுப்பு, வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அடிப்படைத் தரவுகளை வழங்கும் முக்கியமான நிகழ்வாகும்.முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பில், பொதுமக்கள் se.census.gov.in என்ற இணையதளம் வழியாக தங்களது வீட்டு விவரங்கள், வசதிகள், சொத்துகள் உள்ளிட்ட 33 கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்.
இதையும் படிங்க: Reels-க்கு Check... ஊழலுக்கு DOT... அமைச்சர்களுக்கு ஷாக் கொடுத்த முதல்வர் விஜய்..!