2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் இப்போதிலிருந்தே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுகவும், அதிமுக இளைஞர்களை டார்க்கெட் செய்து புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்டளை பிறப்பித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புது ரூட் எடுத்து பயணிப்பதாக வெளியாகியுள்ள தகவல், மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஜூன் 9ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான கே.ஜி.அருள்ராஜ், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜலட்சுமி , முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டேவிட் செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திராவிட முற்போக்கு மக்கள் கட்சியின் நிறுவனருமான ஸ்ரீதரன் ஆகிய 6 பேர் இணைந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்து விஜய் அரசியல் வட்டாரங்களை அதிர வைத்தார்.

இரண்டு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நீதிபதி ஒருத்தர், இன்னொரு பக்கம் ஒரு கல்வி தந்தை. என தேடித்தேடி டிக் அடித்திருக்கிறார் விஜய். ஏன் இப்படியானவர்களை தேர்வு செய்தார் என தமிழக வெற்றிக் கழக வட்டாரத்தில் விசாரித்த போதுதான், தேர்தல் அரசியல்ல ஒரு நீண்ட நெடிய அனுபவம் இருக்கு திமுக, அதிமுகவுக்கு எதிராக களமிறங்க வெறும் வீரியம் மிக்க இளைஞர்கள் பட்டாளம் மட்டும் போதாது. அனுபவம் உள்ள அரசியல் தலைவர்களும் வேண்டும் விஜய் முடிவெடுத்துள்ளாராம்.

இதையும் படிங்க: தகாத செயலில் ஈடுபட்ட விஜய்.. குழந்தைகள் நல குழுவிடம் தவாக நிர்வாகி பரபரப்பு புகார்!!
தேர்தல் களத்தில் கடைசி நேரத்தில் எப்படி எல்லாம் திமுக, அதிமுக இறங்கி விளையாடுவாங்க, அவங்களுக்கு எப்படி டப் பைட் கொடுக்கலாம் என்பதை அறிந்தவர்களை, அதேகட்சியில் இருப்பவர்களை வைத்தே அவர்களுடைய வியூகங்களை தெரிந்து கொள்வதற்காகவே விஜய் இந்த 6 பேரையும் கட்சியில் சேர்த்திருக்கிறாராம். அதோடு இதுபோல திமுக, அதிமுகவில் உள்ள மாஜி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என யார் வந்தாலும் அவர்களை கட்சிக்குள் வளைத்து போடவும், ஊசலாட்ட மனநிலையில் இருப்பவர்களை தவெக பக்கம் இழுக்கவும் விஜய் தரப்பில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவில் நவீன தீண்டாமையை நுழைக்கிறாரா விஜய்?... ஜெயலலிதா பாணியில் அதிரடி சம்பவம்...!