"முன்னேற வேண்டிய நேரம் இது": இனி கிரிக்கெட் மட்டுமே.. ஸ்மிருதி மந்தனா வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சல் திருமணம் குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்த நிலையில், ஸ்மிருதியின் இந்தப் பதிவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்த பதிவில் கூறியிருப்பதாவது, "கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கையைப் பற்றி நிறைய ஊகங்கள் உள்ளன. இந்த நேரத்தில் நான் பேசுவது முக்கியம் என்று நான் உணர்கிறேன். நான் மிகவும் தனிப்பட்ட நபர், அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால், திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை நான் தெளிவுபடுத்த வேண்டும்.
இதையும் படிங்க: போதிய வசதிகள் இல்லை: விஜய் பங்கேற்கும் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட எஸ்.பி. அனுமதி மறுப்பு!
இந்த விஷயத்தை இங்கேயே நிறுத்திவிட்டு, உங்கள் அனைவரையும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையையும் மதித்து, நாங்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நம் அனைவரையும் இயக்கும் ஒரு உயர்ந்த நோக்கம் இருப்பதாக நான் நம்புகிறேன். எனக்கு, அது எப்போதும் என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுதான். நீண்ட காலமாக இந்தியாவுக்காக விளையாடி கோப்பைகளை வெல்வதே எனது இலக்கு என்று நம்புகிறேன், அது எப்போதும் எனது கவனமாக இருக்கும். உங்கள் ஆதரவுக்கு நன்றி. முன்னேற வேண்டிய நேரம் இது."
மகாராஷ்டிராவின் சாங்லியில் நவம்பர் 23, 2025 அன்று பலாஷ் முச்சலுடனான ஸ்மிருதியின் திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆரம்பத்தில், ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவின் திடீர் உடல்நலக்குறைவு (மாரடைப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி) காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பலாஷும் மன அழுத்தம் காரணமாகச் சோர்வுற்று நோய்வாய்ப்பட்டார். இதனால் திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது திருமணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்க பாட்சா பலிக்காது!! கலவர சிந்தனை கட்சிகளுக்கு ஸ்டாலின் காட்டம்! சாம்பியன் நாங்க தான்!