மதுரை மாவட்டம் உத்தங்குடியில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக இந்தக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. அதில், பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை போட்டு மறைக்க முயன்றதை போன்று தான், வெற்று விளம்பரங்களால் 4 ஆண்டுகால அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைக்க முயல்கிறது ஸ்டாலின் மாடல் திமுக அரசு என்ன குற்றம் சாட்டியுள்ளது.

சங்கம் வளர்த்து தமிழுக்கு பெயர் தந்த மதுரையை, தமிழ்நாட்டின் இரண்டாவது மாநகராட்சியை, கல்லும் மண்ணுமான தரமற்ற சாலைகள், முறையற்ற சாக்கடை வடிகால் என அடிப்படை வசதிகள் கூட இல்லாத குப்பை மாநகராட்சியாக மாற்றி, கற்காலத்திற்கே கொண்டு சென்றதே ஸ்டாலின் அரசின் சாதனை என தெரிவித்துள்ளது. நீங்கள் வாக்குறுதி அளித்த வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? போட்டித் தேர்வுகள் மையம் எங்கே? தொழில் வழித் தடம் எங்கே? வர்த்தக மையம் எங்கே? மதுரை மெட்ரோ எங்கே? மதுரைக்கு சொன்ன எதேனும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா ? என அதிமுக அடுக்கடுக்கான கேள்விகளை அதிமுக முன்வைத்துள்ளது.
இதையும் படிங்க: மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி! முதல்வர் ஸ்டாலின் உறுதி...

மேலும், உங்கள் அப்பா பெயர் விளம்பரத்துக்காக ஒரு நூலகம் அமைத்ததை மட்டும் வைத்துக்கொண்டு, இது தான் சாதனை எனில், மதுரை மக்களுக்கு இதை விட பெரும் சோதனை என்ன இருக்கப் போகிறது எனக் கூறிய அதிமுக, போட்டோ ஷூட் தவிர வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாதா எனவும் இத்தனை கேள்விகளுக்கு இடையே, பொதுக்குழு நடத்துகிறேன் என மதுரைக்கு வர பொம்மை முதல்வர் கூச்சப் பட்டிருக்க வேண்டும் இன்றும் சாடியுள்ளது. ஆனால் அவரா., போட்டோ ஷூட் என்றால் Full Make-up உடன் வந்திடுவார் என முதலமைச்சரை அதிமுக கடுமையாக சாடி உள்ளது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கோவில் பெயர் மாற்றம்? மக்கள் மத்தியில் பெரும் குழப்பம்... தமிழக அரசு விளக்கம்