மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 272.70 கோடியில் புதிய சூரை மீன்பிடி துறைமுகத்தையும், 426.13 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன் பிடித்துறை முகங்கள் மீன் இறங்குதலங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணைகள் ஆகியவற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், 2290 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,மீன்பிடித் தொழில் வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னையின் வளர்ச்சியில் மீனவ கிராமங்கள் மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை காக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்! கொடுத்த வாக்கை காப்பாற்றிய திமுக... கலக்கத்தில் மதிமுக!

மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை காக்கவே கச்சத்தீவை மீட்க கோரி தீர்மானம் நிறைவேற்றினோம் என்றும் இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி 76 கடிதங்கள் எழுதி உள்ளதாகவும் இதுவரை 1300 மீனவர்கள் இலங்கையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தமிழக மீனவர்களின் படகுகளின் மீட்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் ஒன்றும் நடிகர் கிடையாது ... அப்பாவு கொந்தளிப்பு!
தொடர்ந்து மீனவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டு பேசி உள்ளார். மீனவர்களின் கண்ணீரைத் துடைக்கும் அரசாக திமுக உள்ளது என்றும் அரசு மீன் பண்ணைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 5 ஆயிரத்திலிருந்து 8000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் மீனவர்களுக்கு 1528 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் மீனவர்களுக்காக இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.