தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு 85 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடனும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் தனித்தும் போட்டியிட்டன. இதனால் தமிழக அரசியல் களத்தில் 4 முனை போட்டி நிலவியது.
குறிப்பாக தவெக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும், விஜய்யின் அரசியல் வருகை மாற்றத்தை ஏற்படுத்துமா மற்றும் 118 தொகுதிகள் என்ற பெரும்பான்மையை எந்தக் கட்சி எட்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரின் பார்வையும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நோக்கி உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் 30 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், பெரம்பூர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். அதேசமயம் திருச்சி கிழக்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் திமுக 58 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 14 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிப்பதோடு 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையில் தான் போட்டி என விஜய் தொடர்ந்து கூறிவந்தார். மேலும் கடைசி கட்ட பிரசாரத்தின் போது அதிமுக என்ற பெயரைக்கூட உச்சரிக்காமல் மற்றும் சிலர் என அதிமுகவை விஜய் குறிப்பிட்டது தேர்தல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #TNElectionResults2026..! காரைக்குடியில் சீமான் பின்னடைவு..! TVK பிரபு தொடர்ந்து முன்னிலை..!!
இதையும் படிங்க: விஜய் தோத்துடுவாரு..! பயத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!