மதுரையில் அதிமுக பிரமுகர் கொலைக்கு மனைவியே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மதுரை அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் பலரையும் அதிர வைத்தது. அதிமுகவைச் சேர்ந்த பிரமுகரான செந்தில்குமார் என்பவர், தனது தேநீர்க் கடையைத் திறக்க அதிகாலை சென்றபோது, மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
அவரது தலை கூட துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்தது. முதலில் இது போதைப்பொருள் அல்லது மது விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் என்று தோன்றியது. ஆனால் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, உண்மை வெளியே வந்தது. இந்தக் கொலையின் பின்னணியில் செந்தில்குமாரின் மனைவி காவியாவே இருந்துள்ளார்.

செந்தில்குமாருக்கும் காவியாவுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர் சாமநத்தம் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவராகவும், அதிமுகவில் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் செயல்பட்டவராகவும் இருந்தார். தேநீர்க் கடை நடத்தி குடும்பத்தைப் பராமரித்து வந்தார். ஆனால் காவியாவுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே கார்த்திக் என்ற ஒருவருடன் தொடர்பு இருந்தது. திருமணத்துக்குப் பிறகும் அந்தத் தொடர்பு கள்ளக்காதலாகத் தொடர்ந்தும் வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வஞ்சிக்கும் பாஜக... ஒத்து ஊதும் அதிமுக..! நிதிநிலை அறிக்கையை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
குடும்பத்தார் பல முறை சொல்லி இருவரையும் சேர்த்து வைத்ததாக தெரிகிறது. அதன்பிறகு கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த காவியா, தனது கள்ளக்காதலன் கார்த்திக் உடன் சேர்ந்து திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. பின்னர் காவியா, அவரது கள்ளக்காதலன் உள்ளிட்டோர் சரணடைந்ததாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஆட்சி மட்டுமில்ல... திமுக கட்சியே CLOSE..! அமைச்சர்களை கேள்விகளால் துளைக்கும் மக்கள்... அதிமுக விமர்சனம்..!