திமுக அரசை கண்டித்தும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஒரு ஜூலை 4ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில். பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாகவும், மாநகரம் முழுவதும் குப்பை கூளங்கள் அகற்றப்படுவதில்லை என்றும் அதிமுக குற்றம்சாட்டி உள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறைந்த அளவே செயல்படும் அம்மா உணவகங்களை பராமரிப்பதற்கு போதிய நிதியை ஒதுக்காததால், அம்மா உணவகங்களை நம்பியுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி முழுவதும் உள்ள பாதாள சாக்கடை பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், சாக்கடை நீர் சாலைகளில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு பெருகியுள்ளது.,கொசுத் தொல்லை அதிகரித்து மக்கள் அவதியுற்று வருகின்றனர்., தாராசுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: இரட்டை இலை யாருக்கு? தொடரும் பிரச்சனை..தேர்தல் ஆணையத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு!

கும்பகோணம் மாநகராட்சி பள்ளிக் கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையில், எந்தவிதமான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல், அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் கல்வி நிதி எங்கே செல்கிறது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர். இவற்றை கண்டுகொள்ளாமல் கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ஜூலை 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கும்பகோணம் காந்தி பார்க் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு புது நெருக்கடி... எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்த அமித் ஷா...!