தமிழக வெற்றி கழகத்திற்கு அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த சம்பவம் அதிமுக கட்சிக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியது. இருப்பினும் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை. அதிமுக இடம் பெற்றால் தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வோம் என்று இடதுசாரிகள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர்.
இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளன. இந்த நிலையில், சென்னை எம் ஆர் சி நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தரப்பு அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய வேலுமணி, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம்… ஏமாற்றம்… எனக்கு கூறுகிறார்கள் என்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தான் என்பதை தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெறுகிறோம் என்று எப்போது கூறினோம் என்ற கேள்வி எழுப்பி உள்ளார். தங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச்செயலாளர் என்றும் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பதவிக்காக ஆசைப்பட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "ரொம்ப சந்தோஷம்"... என் பையன் அமைச்சராகிட்டாரு..! முன்னாள் சபாநாயகர் தனபால் பெருமிதம்..!
திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள் என்று கூறியுள்ளார். புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மக்களிடம் சரியான செய்திகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பதவிக்கு ஆசைப்பட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரவில்லை என்றும் திமுக எதிர்ப்பு என்பதற்காகவே ஆதரவு தந்திருப்பதாகவும் கூறினார். அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் போன்ற திட்டங்கள் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 'போர்வாள்"..! அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு...! அறிமுகம் செய்த EPS..!!