ஏர் இந்தியாவின் AI-171 விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர் , அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட சில வினாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகானி நகரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி வெடித்து தீப்பிடித்தது. விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மற்ற பயணிகள் 241 உட்பட பலர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கவே மக்கள் அஞ்சும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கி விட்டு புறப்பட தயாரான போது என்ஜின் ஒன்று செயல்படாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: விமான விபத்து எதிரொலி! மூணு மாசம் தான் கெடு.. எல்லா விவரங்களும் கைக்கு வரணும்! ராம் மோகன் நாயுடு அதிரடி..!

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக விமானத்திலிருந்து பயணிகளை கீழே இறக்கி விட்டு பழுது நீக்கம் செய்வதற்காக விமானத்தைக் கொண்டு சென்றனர். பயணிகள் வேறு விமானங்களில் மும்பைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்ஜின் செயல்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல், விமான விபத்துக்கு பிறகு முதன்முதலாக அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: போயிங் ரக விமானங்களுக்கு செக்.. TOP டூ BOTTOM ஆய்வு செய்ய டிஜிசிஏ அதிரடி உத்தரவு..!