மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ஒரு பக்தரின் 10 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இந்த புகாரில், கார் சாவியை பார்க்கிங் செய்ய அஜித் குமாரிடம் கொடுத்ததாகவும், பின்னர் நகை காணாமல் போனதாகவும் கூறப்பட்டது. இதனால், அஜித் குமார் மீது சந்தேகம் விழுந்து, கோவில் நிர்வாகத்தினரால் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கு தொடர்பாக ஜூன் 27 அன்று மானாமதுரை குற்றப்பிரிவு காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமாரை போலீசார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். உடலில் 50 இடங்களில் அஜித் குமாருக்கு காயங்கள் இருந்ததாகவும் மூளை உள்ளிட்ட பல இடங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அஜித் குமார் மீது காவலர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகள் மற்றும் லத்தி ஆகியவற்றால் தாக்கப்பட்டதாகவும், அவரது முகம் மற்றும் ஆண் உறுப்பில் மிளகாய் பொடி தூவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், சஸ்பென்டில் உள்ள டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் முன்ஜாமின் கேட்டார்.
இதையும் படிங்க: மடப்புரம் அஜித் கொலை வழக்கு... சிக்கிய DSP... சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!
அவரின் முன் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. சண்முக சுந்தரத்தை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”ஏற்கனவே கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கவில்லை என்றும் எனவே, மனுதாரரை கைது செய்து விசாரிக்க வேண்டியதுள்ளது என வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மடப்புரம் அஜித் கொலை வழக்கு... சிக்கிய DSP... சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!