மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ஒரு பக்தரின் 10 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இந்த புகாரில், கார் சாவியை பார்க்கிங் செய்ய அஜித் குமாரிடம் கொடுத்ததாகவும், பின்னர் நகை காணாமல் போனதாகவும் கூறப்பட்டது. இதனால், அஜித் குமார் மீது சந்தேகம் எழுந்து, கோவில் நிர்வாகத்தினரால் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கு தொடர்பாக ஜூன் 27 அன்று மானாமதுரை குற்றப்பிரிவு காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமாரை போலீசார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். உடலில் 50 இடங்களில் அஜித் குமாருக்கு காயங்கள் இருந்ததாகவும் மூளை உள்ளிட்ட பல இடங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அஜித் குமார் மீது காவலர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகள் மற்றும் லத்தி ஆகியவற்றால் தாக்கப்பட்டதாகவும், அவரது முகம் மற்றும் ஆண் உறுப்பில் மிளகாய் பொடி தூவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. சாதாரண கொலையே இல்லை, இதே கொலை செய்துள்ளார்கள் என்று கூறிய நீதிமன்றம், காவலர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது கண் துடைப்பு என்றும் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியது. பிறகு வாழ்க்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த நிலையில், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்தின் இறப்புச் சான்று ஆவணங்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இறப்புச் சான்று ஆவணங்களை திருப்புவனம் போலீசார் வழங்கவில்லை என்று அவரது சகோதரர் நவீன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், இறப்பு அறிக்கை குறித்து ஆவணங்களை நேற்றே சுகாதாரத் துறையிடம் வழங்கி விட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அஜித் மரணம்: எதுக்கு கட்டப்பஞ்சாயத்து? யாரைக் காப்பாத்த துடிக்கிறீங்க? வறுத்தெடுத்த அதிமுக..!
இதையும் படிங்க: அஜித் குமார் மரண வழக்கு! மடப்புரத்தில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள்... தீவிர விசாரணை..!