பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது; மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி தனது உரையை துவங்குகிறேன். தமிழகத்திற்கு வந்து உங்களுடன் தமிழில் பேச முடியவில்லை என வருந்துகிறேன். ஜூன் 22 ஆம் தேதி முருகன் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள் என நம்புகிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் தனது எண்ணம் சிந்தனை தமிழகத்தை நோக்கியே இருக்கும்.

அமித் ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என ஸ்டாலின் சொல்கிறார்., அமித் ஷாவால் உங்களை தோற்கடிக்க முடியாவிட்டாலும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை தோற்கடிப்பார்கள். உங்கள் காதுகளை திறந்து வைத்து நான் சொல்லுவதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 2026 நடைபெறும் தேர்தலில் தமிழக மற்றும் மேற்கணக்கத்தில் பாஜகவின் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக உங்கள் முன் தெரிவித்துக் கொள்கிறேன். உடலில் தான் திமுக ஆட்சி திளைத்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: திமுகவை விரட்டுவதே ஒற்றை இலக்கு..! அண்ணாமலை அனல் தெறிக்கும் பேச்சு..!

திமுக ஆட்சி மத்திய அரசிடம் இருந்து பிரதமர் மோடி கொடுக்கும் பணத்தை மக்களுக்கு செலவிடாமல், மடைமாற்றி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைத்துவிடாமல் செய்கின்றார்கள். இன்றைக்கு திமுக ஆட்சியில் ஏழைகள் விலைவாசி ஏற்றத்தாழ்வு அவர்களின் வாழ்வாதாரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தாலும் அவர்கள் வாழ முடியாத சூழலில் மத்திய அரசின் கிடைக்காத சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக அரசு நூற்றுக்கு நூறு சதவீதம் தோல்வியடைந்த அரசாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!