சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் தற்போது ஏற்பட்டுள்ள கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு காலை உணவாக இட்லி, மதியம் சப்பாத்தி அல்லது சாம்பார் சாதம், இரவு பல்வேறு வகையான உணவுகள் என வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல உணவகங்களில் இந்தப் பிரபலமான உணவு வகைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த தட்டுப்பாடு மார்ச் மாத இறுதியிலிருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை தீவிரமடைந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அம்மா உணவகங்கள் ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய அமைப்பாக இருந்து வருகிறது. ஒரு இட்லி ஒரு ரூபாய், சாத வகைகள் ஐந்து ரூபாய் என மிகக் குறைந்த விலையில் தரமான உணவு கிடைத்ததால், இந்த உணவகங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

ஆனால், மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் போர் சூழல் காரணமாக இந்தியாவுக்கு வரும் எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வணிக ரீதியான கேஸ் சிலிண்டர் விநியோகம் கடுமையாகக் குறைந்துள்ளது. சென்னையில் உள்ள பெரும்பாலான அம்மா உணவகங்களுக்கு தினசரி ஒரு சிலிண்டர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று நாட்களுக்கு ஒரு சிலிண்டர் என்ற அளவுக்கு விநியோகம் சுருங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நாட்டையே ஆள்கிறவருக்கு எவ்வளவு பவர் இருக்கும்! வில்லிவாக்கத்தில் எடப்பாடி பழனிசாமி 'பவர்ஃபுல்' பேச்சு!
இந்த நிலையில், சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்களில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக முன்பு வழங்கப்பட்ட இட்லி, சப்பாத்தி, சாம்பார் சாதம் போன்றவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. தற்போது காலை பொங்கல், மதியம் தயிர் சாதம், இரவு தக்காளி சாதம் மட்டும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!