தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ். கீர்த்தனா, சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்தச் சம்பவம் வீடியோவாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வின்போது பள்ளியின் சமையலறை, கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் கீர்த்தனா, மாணவிகளுடன் உரையாடினார். ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டபோது ஒரு மாணவி தயக்கத்துடன் பதிலளிக்கத் திணறினார். அவரது தந்தையின் தொழில் குறித்து கேட்டபோது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். பின்னர், வகுப்பில் “லாஸ்ட் பெஞ்ச்” மாணவர்கள் குறித்து பேசி, ஆசிரியர்களுக்கு மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களை நடத்த அறிவுறுத்தினார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. நானும் அரசு பள்ளி மாணவி தான் என்று அமைச்சர் கீர்த்தனா பதில் கொடுத்தும் விமர்சனங்கள் அடங்கவில்லை. திமுக இதனை வன்மையாக கண்டித்துள்ளது. அரசுப்பள்ளி மாணவியின் தன்னம்பிக்கையைத் தனது விளம்பர Reelsகாக Camera முன்னால் கேலி செய்து சங்கடப்படுத்திய அமைச்சர் கீர்த்தனாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியது.
இதையும் படிங்க: டாய்லெட் இல்ல... பிடி சார் இல்ல... நீங்க என்னதான் பண்ணீங்க? அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா கேள்வி!
சொந்த அனுபவங்களை மறந்த அமைச்சரின் இந்த அதிகாரம் மிக்க மேட்டிமைத்தனம், தவெக-வின் விளம்பர வெறிக்காக எவரையும் பலி குடுக்க தயங்க மாட்டோம் என்ற சிந்தனையை அப்பட்டமாகக் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, தங்கள் விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் இத்தகைய பொறுப்பற்ற செயலைத் தவெகவும் அதன் தலைவரும் கைவிட வேண்டும் என வலியுறுத்தியது. பதவி உயர்ந்தால் மட்டும் போதாது; என்றும் உங்களுக்கும் உங்களோடு இருப்பவர்களுக்கும் மனமும் உயர்ந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆய்வு என்ற பெயரில் அட்டூழியம்..! புது சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா..! விளாசிய நயினார்..!