சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஞானசேகரன் என்பவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு மே 28ஆம் தேதி வெளியானது. அதில், ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று வெளியாகி உள்ளது. அதில், அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: அந்த சார் யார்? அந்தரத்தில் தொங்கும் கேள்விகள்.. சந்தேகம் எழுப்பிய தமிழிசை..!

இதனிடையே, தீர்ப்பின் நகல் குற்றவாளி ஞானசேகரன் தரப்பிடம் கொடுக்கப்பட்டது. 200 பக்கங்கள் கொண்ட நகல் ஒப்படைக்கப்பட்டதாகவும், பாலியல் வழக்கு என்பதால் விபரங்கள் வெளியிடபடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!