புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடி பட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகள் கீழ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கோப்பை உட்பட பல்வேறு கோப்பைகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டி 28ஆம் தேதி வரை நடக்கிறது. இன்று நடந்த போட்டிகளை முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். மேலும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார்.
அண்ணாமலையிடம் இருந்து பதக்கத்தை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, கழுத்தில் வாங்க மறுத்தார். தொடர்ந்து, அவரிடம் இருந்து கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அண்ணாமலை கையால் பதக்கம் பெற மறுத்த திமுக முக்கிய புள்ளியின் மகன்... மேடையில் நடந்த தரமான சம்பவம்...!
இதனைத் தொடர்ந்து மேடையில் உரையாற்றிய அண்ணாமலை, அந்த தம்பி நல்லா இருக்கணும். எங்க இருந்தாலும் சிறப்பா இருக்கணும். அவரு யாரு கையில பதக்கம் வாங்கணும், யாரு கையில பதக்கம் வாங்க கூடாது என்பது அவருடைய விருப்பம்.
என்னை பொறுத்தவரை டிஆர்பி ராஜா அவருடைய மகன் எங்கிருந்தாலும் சிறப்பா இருக்கணும். இந்த துறையில சாதனை பண்ணனும். ஒரு பெரிய மனிதரா வளரணும் என்று நான் மனதார வாழ்த்துகின்றேன். அது என் கையில பதக்கம் வாங்கல மறுத்துட்டாரு, இன்னொருத்தர் கையில வாங்குனாரு எனக்கு அது முக்கியம் இல்லைங்கன்னா. நல்ல மனிதரா வரணும். அது மட்டும்தான் என்னுடைய ஆசை என்றார்.
இதையும் படிங்க: கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் கேப்டன்..! அண்ணாமலை புகழாரம்..!