நாளைய தினம் அனைத்து இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இசுலாமியர்கள் அனைவருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது; தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும் நன்நாளாகவும்., ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்றுகூடி இறைவனின் புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாளாகவும் கொண்டாடப்படுவதே 'பக்ரீத்' திருநாள் என்றும் இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்., துன்பப்படுபவர்களுக்கு உதவிபுரியுங்கள்.,அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்.,எளியவர்களிடம் கருணை காட்டுங்கள்., சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களுக்கு ஆதரவா பேசுனா பத்தாது.. செயலில் காட்டணும்.. வக்பு சட்டம் தொடர்பாக திமுகவை டார்கெட் செய்யும் விஜய்!

இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும் என்றும் அது மனிதகுல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என்று மனதார வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், தனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சோகத்தை ஏற்படுத்திய பெங்களூரு உயிரிழப்பு சம்பவம்! RCB நிர்வாகி உட்பட 3 பேர் கைது...