உடுமலை அருகே மடத்துக்குளம் மட்டத்துக்குட்பட்ட கணியூரில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற நான்கு பேர் எதிரே வந்த லாரியில் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் மூவர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ்(26), சபரி (25), பாலபிரகாஷ் (28) குணசேகரன் (18). தேங்காய்ப் பறிக்கும் தொழிலாளர்களான இவர்கள் நால்வரும், ஒரே இருசக்கர வாகனத்தில் கணியூர் வழியாக மடத்துக்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
கணியூர் ஆஸ்பத்திரி மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மடத்துக்குளத்தில் இருந்து கணியூர் நோக்கி வந்த லாரியும், இவர்களது இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதின.
இதில் படுகாயமடைந்த நால்வரையும் அப்பகுதியினர் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட தினேஷ், சபரி, பாலபிரகாஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் குணா என்ற நபர் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இச்சமூகம் குறித்து கணியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எமனாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து... பைக்கில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட கணவன், மனைவி பலி...!