சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேரலை விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா மற்றும் அவரது தொண்டர்களை திமுகவினர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை மற்றும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், திமுகவினருக்கு நியாயம் தலைதூக்கும் போது வன்முறைதான் ஒரே பதில் என்று கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா மற்றும் பாஜகவினரை தாக்குவதற்காக 100க்கும் மேற்பட்ட திமுக குண்டர்கள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் சோடா பாட்டில்களுடன் திரண்டுள்ளனர்.
அவர்களை தாக்க உதவும் வகையில் அப்பகுதியில் மின்விளக்குகள் வேண்டுமென்றே அணைக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இது திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் மோசமான சட்டம் ஒழுங்கு சூழலை காட்டுகிறது. குற்றம் செய்தவர்களை கைது செய்யாமல், திமுக குண்டர்களை காப்பாற்றவே போலீசார் அதிக நேரம் செலவிடுகின்றனர்.
இதையும் படிங்க: எஸ்.ஜி.சூர்யாவை சுத்துபோட்ட திமுகவினர்!! கரண்ட் கட் செய்து விட்டு தாக்கியதாக புகார்! சென்னையில் அதிர்ச்சி!
சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் கருத்து வேறுபாடுகள் வன்முறையால் ஒடுக்கப்பட்டது போன்ற திமுகவின் இருண்ட நாட்களை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
When reason prevails, DMK’s only response is violence.
As BJYM State President Thiru @SuryahSG avl firmly cornered the DMK with facts during a debate hosted by @News18TamilNadu, hundreds of DMK goons armed with deadly weapons and soda bottles stormed the venue to attack him and… pic.twitter.com/EXyf8KDcEs
— K.Annamalai (@annamalai_k) January 9, 2026
இதேபோல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் மீது திமுக ரவுடிகள் தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியின் கொடூர முகத்தை கண்ட தமிழக மக்களின் கோபத்தை எண்ணி பயந்து, திமுகவினர் வன்முறையை கையில் எடுத்துள்ளனர். விவாதங்களில் மக்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட வன்முறையை பதிலாக அளிப்பது ஜனநாயகத்தை அழிப்பதற்கு சமம். தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தரப்பு இதை வன்மையாக கண்டித்துள்ள நிலையில், திமுகவினர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது போன்ற வன்முறை சம்பவங்கள் ஜனநாயகத்தை பாதிக்கும் என்பதால், அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி வன்கொடுமை! நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்!! நயினார் ஆவேசம்!!