முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் நடைபெறும் முக்கியமான கூட்டமாகக் கருதப்பட்டது.
குறிப்பாக, விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் இதில் மையமாக இருந்தன. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், செலவினத் திட்டங்கள் மற்றும் மக்களுக்கு பயனளிக்கும் புதிய அறிவிப்புகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. தொழில் முதலீடுகள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என்றும், பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!
இடைக்கால பட்ஜெட் என்பது ஒரு தற்காலிக, இடைக்கால நிதி ஏற்பாடு. இது முழு நிதியாண்டுக்கான விரிவான திட்டமிடல் அல்ல. மாறாக, தற்போதைய அரசு பதவியில் இருக்கும் காலத்தில் அரசு இயங்குவதற்குத் தேவையான செலவுகளுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் ஒரு ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்ததும், அது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
இதையும் படிங்க: MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!