தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை 5:30 மணி நிலைவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது எனவும், இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்கின்ற தகவலையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு - மத்திய வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் 27 ஆம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வரும் 27ஆம் தேதி அன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 23 மாவட்டங்களில் கனமழை... சென்னைக்கு "HIGH ALERT"..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!
கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 26 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் மழைநீர் தேங்கினாலும் வடிஞ்சுடுது... மக்களுக்கு சந்தோஷம் தான்..! உதயநிதி பேச்சு...!