நடப்பு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிடும் வகையில் சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணைமேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பருவமழையின் போது கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலும், இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்-துணைமேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் என அனைவரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
இதையும் படிங்க: மழைக்காலம்... உஷாரா நடந்துக்கோங்க! பாதுகாப்பு நடைமுறைகளை வெளியிட்ட மின் பகிர்மான கழகம்...!
அப்போது, சென்னையில் வெள்ளம் தேங்கினாலும் மழை நின்றவுடன் வடிந்து விடுவதாக தெரிவித்தார். வெள்ள பாதிப்பின் போது மக்களுடன் நாம் துணை நிற்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார். வெள்ள பாதிப்பு இருந்தாலும் மக்களிடம் கோபம் இல்லை என்றும் மகிழ்ச்சியுடன் தான் நம்மை அழைக்கிறார்கள் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: உடனே போங்க... NO EXCUSE... பருவமழையை எதிர்கொள்ள கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்த முதல்வர்...!