ஈரோட்டில் உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தொடர்ந்து உரையாற்றி முதல்வர் ஸ்டாலின், அகில இந்திய அளவில் பயிர் உற்பத்தி திறனில் தமிழ்நாடு சிறப்பான இடம் பெற்றுள்ளது சிறு தானியங்கள் கேழ்வரகு எள், துவரை ஆகியவற்றில் முதலிடம் பெற்றுள்ளோம். மக்காச்சோளம் எண்ணெய் வித்துக்கள் கரும்பு ஆகியவற்றில் இரண்டாவது இடம், குறு தானியங்களில் மூன்றாம் இடம் பெற்றுள்ளோம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை இதற்காக செயல்படுத்தி வருகிறோம் நகரங்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமமும் அதற்கு இணையான வளர்ச்சி அடைய அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை இணைத்து மொத்தம் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: எழுத்தில் சூரப்புலி... செயலில் எலி! அவரு சூனாபானா தவழப்பாடியார்... நக்கலடித்த ஆர்.எஸ்.பாரதி

இலவச மின்சாரத்திற்காக இதுவரை 26223 கோடி செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையை விட நெல்லுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது கரும்பு விவசாயிகள் நலன் கருதி ஒன்றிய அரசு அறிவித்த ஆதார விலையான ஒரு டன்னுக்கு 3181 ரூபாய்க்கும் மேல் 349 ரூபாய் சிறப்பு ஊக்க தொகையாக வழங்கி வருகிறோம் விவசாயிகளுக்கு பார்த்து பார்த்து செய்வதால் தான் வேளாண்மையும் பெருகி இருக்கிறது உழவர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மண்ணுயிர் காப்போம் என்ற திட்டத்தினை கடந்த ஆண்டு செயல்படுத்த தொடங்கினோம். தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விளை விப்பதை ஊக்கப்படுத்தி, 20 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

தோளில் துண்டு போட்டு கொண்டு வேஷம் போடுகின்ற போலி விவசாயிகள் நாங்கள் அல்ல, விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் முதல் ஆளாக துணை நிற்பவர்கள் நாங்கள், கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1630 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்தில் 32 லட்சம் விவசாயிகளுக்கு 5 ஆயிரத்து 720 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஏராளமான சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இபிஎஸ் மகனை காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணி? அந்தர் பல்டி அடித்த ஜெயக்குமார்..!