கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் விஜய் அவரது நினைவை போற்றி புகழாரம் சூட்டி உள்ளார். கலைஞர் கருணாநிதி ஜூன் 3, 1924 அன்று பிறந்தார். அவரது பிறந்த நாள் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அவரது தலைமையில் தமிழ்நாடு பல்வேறு சமூக நலத் திட்டங்கள், கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தமிழ் பண்பாட்டு வளர்ச்சியைப் பெற்றது. அவரது 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டின் அரசியல், இலக்கியம் மற்றும் சமூக நீதி வரலாற்றில் இன்று ஒரு முக்கிய நாளாகப் பதிவாகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமா உலகில் இருந்து அரசியல் களத்திற்கு வந்து, திராவிட இயக்கத்தின் முன்னோடியாகவும், தமிழ்நாட்டின் நவீன சிற்பியாகவும் உருவெடுத்தவர். அவரது நினைவு தமிழக அரசியலில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING: தவெக அரசின் அதிரடி மூவ்... தமிழகம் முழுவதும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!! முழு விவரம்..!!
இந்த நிலையில் முதல்வர் விஜய் கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிப்பதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குஷ்பூ வீட்டில் டும்.. டும்.. டும்..! முதல்வர் விஜய்யை நேரில் சென்று அழைத்த சுந்தர். சி குடும்பத்தினர்..!!