தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் திரு கணபதி சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராகவும் பிஜேபி அரசின் மதவாதத்திற்கு எதிராகவும் வாக்களித்து நீங்கள் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஒரு மாற்றத்தை வேண்டி வாக்களித்து மகத்தான வெற்றியை தங்களுக்கு தந்துள்ளார்கள்.
தாங்களும் முதல்வராக பதவி ஏற்றவுடன் தமிழக அரசியலில் ஒரு நாகரிகமான அரசியலை முன்னெடுக்கும் விதமாக முன்னாள் முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுத்துள்ளீர்கள்.
ஆனால் அதே சமயம்,ஒரு சில நிகழ்வுகள் எந்த நோக்கத்திற்காக, ஊழலுக்கு எதிராக, மக்கள் வாக்களித்தார்களோ அந்த நோக்கத்தையும் எதிர்பார்ப்பையும் சிதைப்பதாக உள்ளது.அதிமுக கடந்த பத்தாண்டுகளாக பிஜேபி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கி பல்வேறு வழக்குகளை சந்தித்துள்ளவர்கள் ஒரு சிலர் பிஜேபி தலைமையுடன் வெகு நெருக்கம் காட்டி தேசிய ஜனநாயக கூட்டணி அமைய முனைப்பு காட்டி கூட்டணியை உருவாக்கியவர்கள்.
இதையும் படிங்க: 5000 பேருடன் தவெகவில் இணைவோம்..! அதிமுக நிர்வாகி பகிரங்க அறிவிப்பு..!
அவ்வாறிருக்க தாங்கள் நேற்று அத்தகைய அதிமுக நிர்வாகிகளான SP. வேலுமணி,
C. விஜயபாஸ்கர் C. V.சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்திருப்பது தங்களுக்கு வாக்களித்த 1.72 கோடி வாக்காளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த செயல் தங்களது வெற்றிக்காக தங்களது எதிர்காலத்தை பணயமாக வைத்து உழைத்த த.வெ.க தொண்டர்கள் மற்றும் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒருவித ஏமாற்றமும் விரக்தியும் நிலவிட வழி செய்கிறது. ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைப் போல ஒருவேளை அதிமுக ஒரு பிரிவினருடன் கூட்டணி அமைத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் இதுவரை ஆண்ட ஊழல் கட்சிகளுக்கும் தங்களது அரசுக்கும் வேறுபாடு இல்லை என்று மக்கள் நினைக்கத் தோன்றும்.
எனவே,தங்களது முடிவினை மறுபரிசீலனை செய்து ஊழலற்ற ஆட்சியை அமைக்க உறுதியோடு இருக்க வேண்டுகிறோம்.
இதையும் படிங்க: டெல்லியில் பேசியாச்சு..! நம்ம ஆட்சிதான்..! எடப்பாடி சொன்னதை உடைத்த சி.வி. சண்முகம்..!