சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டது. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. 144 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்த நிலையில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை நிரூபிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். 47 எம்எல்ஏக்களும் இருப்பது போன்ற புகைப்படம் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது அல்ல என்று விளக்கம் கொடுத்தார்.

நான் முதலமைச்சராக இருக்கப் போகிறேன் என்றும் திமுக வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார் என்ற திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுவது தவறு என்றும் கூறியுள்ளார் கொறடாவை பொதுச் செயலாளர் தேர்வு செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "தவறான பாதையில் விஜய்"..! இதெல்லாம் என்ன நியாயம்..? இபிஎஸ் சரமாரி கேள்வி..!
பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு சி. விஜயபாஸ்கர் கொறடாவாக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும், எட்டாம் தேதியே கூட்டத்தைக் கூட்டி கொறடாவை தாங்கள் தேர்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி கொடுத்திருப்பது போலி கடிதம் என்று குறிப்பிட்டார். சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணியை தாங்கள் தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். என் பிள்ளை மீது சத்தியம் செய்வேன் என்றும் ஆவேசமாக பேசினார். நான் டெல்லியில் பேசி விட்டேன் என்றும் நாம் ஆட்சி அமைக்கிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரு தரப்புக்கு மட்டும் முதல்வர் ஆதரவு கொடுப்பதா.? நம்பிக்கை வாக்கெடுப்பின் போது EPS கேள்வி..!