நாட்டில் NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கோவிட்-19 புதிய தொற்றுநோய் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுவாச நோய் தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: உச்சக்கட்ட எச்சரிக்கை... இந்தியாவில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு - கிடுகிடுவென உயரும் பலி எண்னிக்கை!

இதையும் படிங்க: அய்யய்யோ.. மீண்டும் மீண்டுமா! டெல்லியில் வேகமெடுக்கும் கொரோனா.. எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா?