சி.வி. சண்முகம் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் மற்றும் முன்னாள் அமைச்சர். 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முன்பு அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். தேர்தல் வெற்றிக்குப் பின், இரட்டைப் பதவி விதிமுறைகளின்படி ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தார். இது வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், அதிமுகவின் உள்கட்சி பிரச்சினைகள் இப்போது அவரது எம்எல்ஏ பதவிக்கும் சவாலாக மாறியுள்ளது.
தேர்தலுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் கட்சி ஒன்றிணையும் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருடன் தொடர்புடைய சில எம்எல்ஏக்கள் ஈபிஎஸ் அணியுடன் இணைந்தனர்.

சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களில் சிலரும் இதில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் சண்முகம் தனித்து விடப்பட்டதாகவும், அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. நான்கு எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதேபோல சி.வி. சண்முகம் அதிருப்தியில் இருப்பதாகவும் அவரும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தன.
இதையும் படிங்க: #BREAKING: சித்தராமையா ராஜினாமா...! பரபரக்கும் கர்நாடக அரசியல்.. குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி..!!
இந்த நிலையில், எம்எல்ஏவாக தன்னுடைய கடமையை முழுமையாக உங்களுக்காக செய்வேன் என்று தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து சி.வி ஷண்முகம் பேசினார். ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் மயிலம் தொகுதிக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். மயிலம் சட்டமன்ற தொகுதி மக்களின் தேவை எதுவாக இருந்தாலும் தன்னிடம் கூறுங்கள் என்றும் செய்து கொடுப்பேன் எனவும் உறுதிப்பட கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!