தமிழ்நாடு அரசியலில் அதிமுக தொடர்ந்து சந்தித்து வரும் உள் மோதல்கள் மற்றும் பிளவுகளுக்கு மத்தியில், முன்னாள் சுகாதார அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதால், விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நடவடிக்கை அதிமுகவின் தற்போதைய எம்எல்ஏ எண்ணிக்கையை மேலும் குறைத்து, கட்சியின் உள் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.
விஜயபாஸ்கர் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மருத்துவர் பின்னணியுடன் அரசியலுக்கு விஜயபாஸ்கர் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மருத்துவர் பின்னணியுடன் அரசியலுக்கு வந்தவர். 2001ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியிலிருந்து முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பின்னர் விராலிமலை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். ஜெயலலிதா ஆட்சியில் 2013 முதல் 2021 வரை சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்று, கொரோனா கால உள்ளிட்ட சவாலான கட்டங்களில் பணியாற்றியவர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பெரும் பிளவு இந்த ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கலகக் கொடி உயர்த்தினர். இந்த நிகழ்வுக்குப் பிறகு அதிமுக தலைமை கடும் நடவடிக்கை எடுத்தது. விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் பொறுப்புகளை இழந்த விஜயபாஸ்கர், மாவட்ட அலுவலக சாவியை புதிய செயலாளரிடம் ஒப்படைத்தார்.
இதையும் படிங்க: 6 மணிக்கு மேல் 'Not Reachable' மோட் ... இதுதான் நல்ல மாற்றமா? - விஜயை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!
இதனிடையே அவர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் பிரபாகரிடம் கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். புதுக்கோட்டையில் சி. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை கொண்டாடினர். “துரோகி விஜயபாஸ்கர் ஒழிக.. துரோகி விஜயபாஸ்கர் ஒழிக” என கோஷமிட்டனர். சட்டமன்ற உறுப்பினர் பதவியை சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து மக்களுக்கு லட்டு வழங்கி அதிமுகவினர் கொண்டாடியுள்ளனர்.
இதையும் படிங்க: கேள்வி கேட்டால் குற்றமா..? கட்சிக்குள் இணைந்தது எத்தனை பேர்..? அதிமுக Ex. அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்வி..!