தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறிய, பெரிய கோயில்களில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பதை எதிர்த்தும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரியும் பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்களை 'அந்த மாதிரி' வீடியோ எடுத்த இளசுகள்.. சிக்கிய 2 பேர்.. மேலும் இருவருக்கு வலைவீச்சு..!
தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

பின்னர் இருதரப்பினரின் வாதங்களை கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடர்புடைய மனுதாரர்கள், அந்நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் ரூபாய் 25 ஆயிரத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு மனுதாரர் அளிக்கும் பணத்தை கிராமத்தில் உள்ள நீர் நிலைகளை தூர்வார பயன்படுத்தலாம் என்ற நிபந்தனையை விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட்டார்.
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெயரிலேயே வைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கச் சொல்வது சரியா? தமிழிசைக்கு மநீம நிர்வாகி கேள்வி!!