கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ ஜி அஸ்ரா காருக்கு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடங்கிய சில நாட்களிலேயே, த.வெ.கவின் தலைமை நிர்வாகிகள் என். ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணை அரசியல் ரீதியாகத் தங்களை இலக்காக்கும் வகையில் நடத்தப்படுவதாகக் கூறி, முதலில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களில், விசாரணை போலீஸ் துறையால் நடத்தப்படுவதால், அது நடுநிலையற்றதாக இருக்கும் என வாதிடப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்த மனுக்களை நிராகரித்ததும், இருவரும் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இதையும் படிங்க: வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்... - ஆனந்த் போய் ஆதவ் வந்தது டும்..டும்..டும்... அப்செட்டில் தவெக தொண்டர்கள்...!
இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், விஜயுடன் விசுவாசிகள் இருந்திருந்தால் கரூர் சம்பவமே நடந்திருக்காது என காமெடி நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். விஜய் நேரில் சந்தித்தால் அதிமுகவோடு கூட்டணி வைக்க கோரிக்கை வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING எதிர்பாராத திருப்பம்... கரூர் செல்ல தேதி குறித்த விஜய்... வெளியானது அதி முக்கிய அப்டேட்...!