மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் மூலம் அவர்களிடமிருந்து பெறப்படும் நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்களில் தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜூன் மாதம் முதல் வியாழக்கிழமை 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

அதேபோல் இரண்டாம் வியாழக்கிழமை 12-ந்தேதி காலை 11 மணிக்கு மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரம் மழை கொட்டும்... 14 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!!

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற இதுவரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் தங்களது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் கூட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா இருப்பின் தொகுப்பு வீடு கோருபவர்கள், நூறு நாள் அட்டை கோருபவர்கள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களும் அளிக்கலாம். இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறப்பு குறை தீர்க்கும் நாளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள்... தேதி குறித்த விஜய் - டரியலில் திமுக, அதிமுக...!