திமுக அரசியலில் பல்வேறு வகையில் திருப்புமுனைகளை ஏற்படுத்திய மதுரையில் வரும் ஜூன் 1ஆம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ளது. இதற்காக, மதுரை - மேலூர் நெடுஞ்சாலையில் உள்ள உத்தங்குடியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கட்சியில் சில முக்கிய மாற்றங்களை செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் நடைபெற உள்ள திமுக பொதுக்கூட்டத்தில் அந்த மாற்றங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: ரெண்டு சீட்டுக்கு 20 பேர் நெருக்கடி! இடியாப்ப சிக்கலில் அதிமுக... திணறும் இபிஎஸ்!

குறிப்பாக பெண்கள், இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், திமுக துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது திமுகவில் ஐந்து துணை பொதுச்செயலாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் பச்சாவா.? அப்போ உதயநிதி சோட்டா பச்சா.. துரைமுருகனுக்கு தவெக ஹாட்டான பதில்!