தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளது. மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன் ஒன்பதாம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், ஜூன் 12-ம் தேதி வேப்பமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதனிடையே இரண்டு ராஜ்ய சபா சீடர்களுக்கு 20 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்த வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக தலைமை திணறி வருவதாக தெரிகிறது.
இதையும் படிங்க: SIT - னாலும் தமிழ்நாடு போலீஸ் தான்...அரைவேக்காடு இபிஎஸ்! பந்தாடிய அமைச்சர் ரகுபதி

அதிமுக ராஜ்யசபா சீட் அளித்தால் தேமுதிக கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு இன்ப துரை ஆகியோர் சீட் கேட்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நட்சத்திர பேச்சாளர் விந்தியா, முன்னாள் அமைச்சர் செம்மல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நிர்வாகிகள் சிலரும் ராஜ்ய சபா சீட்டுக்காக காய் நகர்த்துவதால் அதிமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: பொள்ளாட்சி வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது... எடப்பாடியை வறுத்தெடுத்த கனிமொழி!!