கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரைக்கும் வந்து திமுக ஆட்சி காலத்தில அமைச்சராக அதாவது உயர்கல்வித்துறை, கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த முறைகேடு மூலமாக கிடைத்த பெருந்தொகையை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ அமலாக்கத்துறை வந்து வழக்கு பதிவு செய்தது.

திமுக முன்னாள் எம்பி கௌதம சிகாமணி உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன்கள் கௌதம சிகாமணி, அசோக் சிகாமணி மற்றும் அவர்கள் நிர்வாக இயக்குனர்களாக இருக்கக்கூடிய மருத்துவமனை மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வந்து சென்னை சிபிஐ திறப்பு நீதிமன்றத்தில விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இன்றைக்கு நீதிபதி ஓம்பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன்கள் வந்து நேரில் ஆஜராகி இருந்தார்கள். அவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகையினுடைய நகல்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையிலே இந்த வழக்கில் இருந்து ஆஜராவதிலிருந்து விளக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணையின் போது பொன்முடி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் என்னவென்றால், அரசு பணி காரணமாக தன்னால் வந்து நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட போதிலும் கூட திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியினுடைய எம்எல்ஏவாக இருப்பதாகவும் திமுக செயற்குழு உறுப்பினராக இருப்பதனால் சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் தனக்கு வழங்கப்பட்டிருப்பதாகக்கூறினார்.

இதையும் படிங்க: ஓசி பஸ்ஸா! இது என்ன கோபாலபுரத்து பணமா? திமுக எம்.எல்.ஏ.வின் ஆணவ பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்..!
மேலும் தன்னுடைய வயதையும் கருத்தில் கொண்டு இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வந்து பொன்முடி தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் வந்து பொன்முடி தற்போது திமுகவின் செயற்குழு உறுப்பினராக இல்லை என்பதனால் அவருக்கு விசாரணையில் இருந்து ஆஜராகவதிலிருந்து விளக்களிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த ஆஜராவதில் இருந்து விளக்களிக்க கேட்டு, பொன்முடி தரப்பில தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை ஜூன் 21-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: திருக்கோவிலூர் திகில்.. பொன்முடிக்கு பதற்றத்தைக் கொடுத்த உதயநிதி மூவ்..!