100 நாள் வேலை திட்டத்தின் மாற்றத்தால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா என்றும் அதை பாராட்ட தங்களுக்கு மனம் இல்லையா எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மாற்றத்தால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளது எதிர்த்து குரல் கொடுக்க துணிவு இல்லாமல் மீண்டும் மீண்டும் பச்சை பொய்யை பழனிச்சாமி அவிழ்த்து விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சாடினார்.

ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு காத்திருக்கு… ஆனா SUSPENS… இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்…!
மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே... என்ன ஆனது என்றும் உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே எனவும் தெரிவித்தார். மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே என்று கூறிய முதலமைச்ச ஸ்டாலின், டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை., ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம் என கூறினார்.
வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய UPA அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெகவில் இணையும் செங்கோட்டையன் ஆதரவு MLA? சட்டென கொடுத்த ரியாக்ஷன்..!