பூத் கமிட்டிகளின் அமைப்பு மற்றும் கழகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைகள் இன்று முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்ற வருகிறது.

முதல் நாளான இன்று, சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி, நயினார், அண்ணாமலை ஜோடி போட்டு வந்தாலும்... எங்க அரசியல் நாயகன் ஸ்டாலினை அசைச்சிக்க முடியாது - கொக்கரிக்கும் திமுக அமைச்சர்...!

இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

மேலும், நாளை காலை 9.30 மணிக்கு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், பகல் 3.30 மணிக்கு, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!