சென்னை உரிமையியல் நீதிமன்றம், எடப்பாடி க. பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில், சூரியமூர்த்தி தரப்பில், கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை எனவும், அவருக்கு கட்சி நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், கட்சி விதிகளை மீறி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சூரியமூர்த்தி தரப்பு வாதத்தை ஏற்கவில்லை, ஆனால் எடப்பாடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணைக்கு தகுதியானது என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ”அமித் ஷாவை கேட்காமல் இபிஎஸ் இதைக்கூட செய்ய மாட்டார்” - அதிமுகவை வச்சி செய்த உதயநிதி ஸ்டாலின்...!
இந்த நிலையில், உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கூறிய மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ததற்கு எதிராக சூரியமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார்.
இதையும் படிங்க: மெகா கூட்டணி கனவுக்கு பின்னடைவு!! விரக்தியில் எடப்பாடி பழனிசாமி! அதிமுகவினர் அதிருப்தி!