மே தின வாழ்த்துக்கள் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்திய அதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தனது கண்டனத்தை பதிவு செய்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தனது கண்டன பதிவில், அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை திமுக அரசு கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணிக்காக சமரசமா....? கே.எஸ்.விஜயகுமாருக்கு மீண்டும் Welcome கொடுத்த EPS..!

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் அதிமுக கழகத்தினர் அல்ல என்றும் எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..!