2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி விஜய் களமாடி வருகிறார். அவரது அரசியல் வருகை திருப்புமுனையாக அமையும் என பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜயின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர்.

கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை இந்த நிகழ்வு முடக்கிய நிலையில் தற்போது மீண்டு வருகிறது. சமீபத்தில் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் ஈரோட்டில் இன்று அவர் பரப்புரை மேற்கொள்கிறார். ஈரோட்டில் டிசம்பர் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொள்ளும் பரப்புரை குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: நாளை ஈரோடு வரும் விஜய்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! பறந்த அதிரடி உத்தரவு..!!
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே சரளை பகுதியில் காலை 11:00 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்துவதற்காக விஜய் சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு விஜய் புறப்பட்டு சென்றார். இன்று 11 மணியளவில் விஜய் மக்கள் சந்திப்பு நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக காலை முதலில் தொண்டர்கள் குவிய தொடங்கினர்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் முன்னாடியே இப்படியா..?? ஈரோட்டில் அடித்துக்கொண்ட தவெகவினர்..!! என்ன நடந்தது..??