தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு மாநிலத்தின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலைத் தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக உயர்ந்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விரிவான புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 06 நிலவரப்படி):
தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்களே அதிகளவில் உள்ளனர்:
மொத்த வாக்காளர்கள்: 5,73,43,291 பேர்.
பெண் வாக்காளர்கள்: 2.93 கோடி பேர்.
ஆண் வாக்காளர்கள்: 2.80 கோடி பேர்.
மூன்றாம் பாலினத்தவர்: 7,728 பேர்.

புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முன்னதாக வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் 5,67,07,380 ஆக இருந்தனர். இருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வழங்கப்பட்ட கால அவகாசத்தில்: கூடுதலாக 6,35,917 வாக்காளர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலமே தற்போதைய மொத்த எண்ணிக்கை 5.73 கோடியைத் தொட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் அதிரடி: 6.48 லட்சம் புதிய விண்ணப்பங்கள்! ஏப்ரல் 6-ல் இறுதி பட்டியல் வெளியீடு!
தமிழகம் முழுவதும் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. புதிய வாக்காளர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டைகள் (EPIC) அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் வாக்குச்சாவடி விபரங்களை elections.tn.gov.in இணையதளத்தில் அல்லது 'Voter Helpline' செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் தேர்தலுக்கான மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்...!! மிஸ் பண்ணிடாதீங்க...!!