பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணையும், நீரையும் மாசுபடுத்துவது மட்டுமல்லாது அவை மைக்ரோ பிளாஸ்டிக்களாக உடைந்து, உணவு சங்கிலி மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றன.

பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மனிதர்களுக்கு புற்றுநோய், இனப்பெருக்கப் பிரச்சனைகள் மற்றும் பிற சுகாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை: அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்..!
பிளாஸ்டிக் மாசுபாடு சுற்றுச்சூழலை மட்டுமல்லாது நமது ஆரோக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தையும் அச்சுறுத்துகிறது. திருமண விருந்துகளில் உணவு பரிமாறும்போது, அருந்துவதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை தருவது வழக்கமாகி விட்டது. இதன் மூலம் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை என்பது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசால் விதிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு, தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடையிட்டது. இதில் பிளாஸ்டிக் பைகள், கப், தட்டு போன்ற ஒற்றைமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கும்.
இந்த தடை உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, மக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உதாரணமாக, இலை அல்லது களிமண் தட்டுகளை பயன்படுத்தலாம். கடைகளில் பொருட்களை வாங்கும் போது, பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை பிரித்து, காகிதம் அல்லது மக்கக்கூடிய பேக்கிங்கில் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, மக்கக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். கடைகளில் பொருட்களை வாங்கும் போது, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகித பைகளை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, மக்கக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும். பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஜூஸ் மற்றும் இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக பேப்பர் ஸ்ட்ராக்களை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தடையின் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குட்கா, பான் மசாலா புகையிலைப் பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி..!