மதுரை மாவட்டம் கோச்சடையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; கன்னடர்களுக்கு தமிழர் என்றாலே ஒரு வெறுப்பு. தமிழில் இருந்து கன்னடம் வந்தது என சொன்னதற்கே கன்னடர்களுக்கு வெறுப்பாக உள்ளது. திராவிட குடும்பத்திற்குள் கன்னடம் இருக்கிறது என்றால் ஏன் தண்ணீர் கேட்டால் மறுக்கிறார்கள். கமல் பேசியதற்கு எதற்கு எதிர்க்கிறார்கள்?

நாங்க தமிழர்கள். எங்களின் தோற்றுவாய் எது, எங்களுடைய தொடக்கம் எது, மொழியின் தொடக்கம் எது என்று வரலாற்று பூர்வமாக சொல்றோம். அதைப் போலவே, கன்னட மொழி எப்போது தோன்றியது, கன்னடம் இனம் எந்த காலகட்டத்தில் தோன்றியது என்பதை வரலாற்று பூர்வமாக சொல்லுங்க? அவங்களுக்கு ஒரு பிரச்னை பண்ண வேண்டும். அதற்காக, இப்படி பண்ணுகிறார்கள், எனக் கூறினார்.
இதையும் படிங்க: என் அம்மா தான் எனக்கு எல்லாம்.. அவ்ளோ பிடிக்கும்.. தந்தையின் குற்றச்சாட்டிற்கு அன்புமணி மறுப்பு..!

பெரியார் பற்றி தம்பி விஜய் தெரியாமல் பேசுகிறார். அவரே ராமசாமி நாயக்கர் என்று தான் தன்னை சொன்னார். தமிழகத்தில் பெரியார் என வெளியான படம், ஆந்திராவில் ராமசாமி நாயக்கர் என பெயர் வைத்து தான் வெளியிட்டார்கள். அது எல்லாம் ஒன்றுமில்லை. ஈ.வெ.ரா.வே ரொம்ப நாட்களாக நாயக்கர் என்று தான் கையெழுத்து போட்டார். இங்கு வெளியான ஈ.வெ.ரா., படம், ஆந்திராவில் நாயக்கர் என்ற பெயரில் தான் வெளியானது. அவர் எழுதிய கடிதத்தில் எல்லாம் நாயக்கர் என்று தான் போட்டுள்ளது. தம்பி விஜய் ஏதோ சொல்லுகிறார் என கூறினார்.

பாமகவில் நடப்பதை பார்க்கும் போது கஷ்டமாகத்தான் உள்ளது. தகப்பன் போல தந்தை போல அன்பு வைத்தவன் நான். அந்த காயம் ஆற வேண்டும். ஆறிவிடும். பாமகவில் சின்ன முரண் சரியாகிவிடும். அவருக்கு இவ்வளவு வருத்தம் இருக்கிறது என்பது அவர் பேசுகையில் தான் தெரிகிறது. இது ஆறும் காயம். இருவரும் அருகருகே அமர்ந்து பேசி தீர்க்கும் சூழல் இல்லாததால் பொதுவெளியில் பேசுகின்றனர். ராமதாஸ் மனதில் இருந்ததை கொட்டி விட்டார். எனவே ஆறிவிடும். இவர்கள் சண்டையால் நாட்டு மக்களுக்கு என்ன இழப்பு. விலைவாசி ஏதும் ஏறி விட்டதா?

கீழடியில் முழுமையான ஆய்வை மேற்கொள்ளாமல் ஒப்புக்கு ஆய்வு செய்தனர். மேலும் அந்த பொருட்களையும் பெங்களூருக்கு கொண்டு சென்று வைத்து விட்டனர். தமிழர்களுக்கு பெருமை தருவதை அவர்களால் ஏற்க முடியாது. தமிழை பெருமையாக பேசும் பிரதமர், நாடாளுமன்றத்தில் சமசுகிருதத்தில் ஏன் கல்வெட்டு வைத்தார்? தமிழுக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பை ஏன் திமுக எம்பிக்கள் கேள்வி கேட்கவில்லை என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கட்சி என்றால் கொஞ்சம் கோஷ்டி இருக்கத் தான் செய்யும்! பூதாகரமாகிறதா அன்புமணி பிரச்னை? ராமதாஸ் ஓபன் டாக்!