ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்சார் போர்ட் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜனநாயகனுக்கு தணிக்கை சான்று கூறிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. தணிக்கை சான்று விவகாரத்தில் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது தவறானது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
விஜயின் ஜனநாயகம் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஜனநாயகன் படத்திற்கு U/A சான்று வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை அடுத்து, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து சென்சார் போர்ட் மேல்முறையீடு செய்தது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்து இருந்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணை தொடங்கியது.
இதையும் படிங்க: பொங்க மாட்டார் விஜய்!! இருக்கு ஆனா இல்லை ரேஞ்சுக்கு விஜயை கலாய்த்த ஆளூர் ஷாநவாஸ்!
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் இதை எதிர்த்து சென்சார் போர்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்து உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தணிக்கை சான்று வழங்கக் கூறிய வழக்கின் விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: ஜனநாயகனுக்கு U/A சான்று… சென்சார் போர்ட் மேல்முறையீடு… தொடரும் சர்ச்சை..!