அண்மைக் காலங்களில் இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இபிஎஸ் வழக்கு... உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து... அதிரடி காட்டிய ஐகோர்ட்
சென்னை உயர்நீதிமன்றம் இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் முக்கியமான நீதிமன்றங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள இந்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நீதித்துறை நிர்வாகத்தில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இது உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீதிமன்ற வளாகமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் வாயிலாக வந்து வெடிகுண்டு மிரட்டலை எடுத்து மோப்ப நாய்களை கொண்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: முறைகேடு வழக்கில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்ப்பு... ஆதாரம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்