கோவை மாவட்டம் புரவிபாளையம் கிராமத்தில் விதிகளை மீறி குவாரி நடத்திய உரிமையாளர் செந்தாமரை என்பவருக்கு 32 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தாமரை மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமே, நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்ற கொண்டு வரப்பட்டது என்று கூறிய நீதிபதி, கோர்ட் விசாரணையின்போது குவாரியை மூடி விட்டதாக அதிகாரிகள் அறிக்கை அளித்ததாகவும், ஆனால், குவாரியை செயல்பட அனுமதித்து உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நீட் மறுதேர்வா? வாய்ப்பில்ல ராஜா! ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்.. மாணவர்கள் கலக்கம்!

சுற்றுச்சூழல் துறை ஆணையரின் உத்தரவு மக்களையும் அரசையும் ஏமாற்றும் விதமாகவும், மோசடியாகவும் உள்ளது என்று தெரிவித்த நீதிபதி, தீராத பேராசைக் கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

மேலும், வழக்கில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்கு உரியது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: எங்களுக்கு அவகாசம் வேண்டும்..! தமிழ் பெயர் பலகை வைக்கும் உத்தரவை பரிசீலிக்க ஹைகோர்ட் உத்தரவு..!